உங்களிடம் இரண்டு படுக்கை அறை உள்ள வீடு வாங்குவதற்கான பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வீட்டில் முதலீடு செய்வீர்களா? அல்லது நகையில் முதலீடு செய்வீர்களா? இரண்டுமே 10, 20 வருடங்களுக்கு பிறகு நிறைய பணத்தை நமக்கு சம்பாதித்து தரும். ஆனால் நம் நகையோ நமது பீரோவில் அல்லது பேங்கில் இருக்கும். ஆனால் நாம் வாங்கும் வீடோ நமக்கு வாடகை தரும் அல்லது நாமே அங்கு தங்கிக் கொள்ளலாம். நாம் முதலீடு செய்யும் போது இந்த மாதிரி பல விஷயங்களை பல கோணங்களில் சிந்திக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.
ஒரு இளைஞன் ஒரு பெண்ணை ஒரு தலையாக விரும்புகிறார். அவரது நண்பர்கள் அவனிடம் நீ எப்போது உன் விருப்பத்தை அந்த பெண்ணிடம் கூறுவாய் என்று கேட்டார்கள். அதற்கு அவன் எனக்கு வேலையில் ஒரு பிரமோஷன் கிடைக்கும் போது நான் அவளிடம் போய் சொல்வேன் என்று சொன்னான். அதற்கு நண்பர்கள் அதுவரை அவள் காத்திருப்பாளா என்று கேட்டனர். அதற்கு அவன் வாழ்க்கையில் நாம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால். ஒரு கல்யாணமாகாத பையன் தன்னுடைய வருங்கால மனைவியின் மாமியாரின் வீட்டில் வாழ்கிறான். ஒரு கல்யாணம் ஆகாத பெண் தன் வருங்கால கணவரின் மாமியாரின் வீட்டில் வாழ்கிறாள். காலம் வரும்போது இருவரும் சந்திக்கிறார்கள், திருமணம் செய்து கொள்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் செய்யும் செயலை திடகார்த்தமான நம்பிக்கையுடன் சிறப்பாகவும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். எண்ணம் போல் வாழ்வு.
நாம் நமக்கு பத்து, பதினைந்து நிமிடத்தில் மரணம் வரும் என தெரிந்திருந்தும் அப்போதும் மண், பொன், பெண் என மோகம் இருந்தால் நாம் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்கிறோம் என்று அர்த்தம். யார் ஒருவர் ஆசையை வென்று உயிரோடு இருக்கிறாரோ அவர் முக்தி நிலை அடைந்தது போன்று ஆகும். அவர் ஒரு மகான் வாழ்க்கை வாழ்கிறார். நாம் ஆசையை வெல்லவில்லை என்றால் நாம் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வந்து கொண்டே இருப்போம். அதனால் நாம் எல்லோரும் ஆசையை வெல்ல முயற்சி செய்யவும். எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment