Practice makes man perfect என்பது ஒரு சொல்லாடல் ஆகும். அதாவது நாம் முயற்சி செய்தால் முழுமை அடையலாம் என்று பொருள். ஆனால் இந்த கூற்று தவறாகும். நாம் முயற்சி செய்தால் நேற்றை விட இன்று சிறப்பாக செய்ய முடியும். நாளை மீண்டும் முயற்சி செய்தால் அதை விட சிறப்பாக செய்ய முடியும். ஆனால் என்றும் முழுமை அடைய முடியாது . எப்போது முழுமை தன்மைக்காக முயற்சி செய்கிறோமோ நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. ஆனால் நேற்றை விட இன்று சிறப்பாக செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தால் நமக்கு ஊக்கம் உற்சாகம் வருகிறது. எண்ணம் போல் வாழ்வு.
எந்த ஒரு பிரச்சனைக்கும் மூன்று தீர்வு இருக்கிறது ஒன்று எது நடந்து இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வது. இரண்டு நடந்ததை மாற்ற முடிந்தால் மாற்றுவது. மூன்று மாற்ற முடியாததை அப்படியே விட்டு விடுங்கள். நாம் எப்பொழுதும் நம் சந்தோஷத்தை இழக்க கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் எப்போதும் ஊக்கம் உற்சாகத்துடன் இருக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.
யார் வேலைக்கு போக வேண்டும், யார் வியாபாரம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? இலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகிறார். யார் ஒருவர் வியாபாரத்தில் தினந்தோறும் தனக்கு ஊக்கம் உற்சாகம் தர ஒருவரை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறாரோ. அவர் வியாபாரம் செய்யவே வந்திருக்கக் கூடாது என்று. அதுவரை ஒருவர் வேலைக்கு போய் தன் முதலாளியிடம் தொழிலை நன்றாக கற்றுக்கொண்டு எப்போது தனக்கு இந்த எல்லையற்ற ஊக்கம் உற்சாகம் வருகிறதோ அன்று வியாபாரம் தொடங்கினால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment