நாம் பொதுவாக யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்றால் அது அவருடைய கர்மா. கர்மா அவரை வைத்து செய்கிறது என்று எல்லாம் சொல்வோம். ஆனால் நாம் ஏதாவது ஒரு பிரச்சனையில் விழுந்து விட்டோம் என்றால் உடனே இறைவன் நம்மை சோதிக்கிறார் என்று கூறுவோம். அதாவது அடுத்தவர்களுக்கு வந்தால் ரத்தம் நமக்கு வந்தால் தக்காளி சட்னி. நாம் புரிந்து இருக்க வேண்டியது. நாம் நல்ல காரியங்கள் செய்தால் நமக்கு நல்ல நிகழ்வுகள் நடக்கும், நாம் கெட்ட காரியங்கள் செய்தால் நமக்கு கெட்ட நிகழ்வுகள் நடக்கும். இது உங்களுக்கும் எனக்கும் பொருந்தும். எண்ணம் போல் வாழ்வு.
காதலிக்கும் போது ஒரு ஆணுக்கு பெண்ணின் நல்ல குணங்கள் மட்டுமே தெரிகிறது அதைப்போல ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணின் நல்ல குணங்கள் மட்டுமே தெரிகிறது. ஆனால் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் நல்ல மற்றும் கெட்ட குணங்களின் ஒரு பேக்கேஜ் தான். திருமணம் ஆகும் போது தான் இருவருக்கும் அடுத்தவரில் நல்ல, கெட்ட குணங்கள் தெரிய வருகிறது. நம் மனதுக்கு ஒருவர் நல்லவராக மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இது நடைமுறைய்ல் நடக்காத விஷயமாகும். அதனால் திருமண வாழ்வில் இருவரும் அடுத்தவரின் குணத்தை அப்படியே ஏற்று வாழ கற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.
Practice makes man perfect என்பது ஒரு சொல்லாடல் ஆகும். அதாவது நாம் முயற்சி செய்தால் முழுமை அடையலாம் என்று பொருள். ஆனால் இந்த கூற்று தவறாகும். நாம் முயற்சி செய்தால் நேற்றை விட இன்று சிறப்பாக செய்ய முடியும். நாளை மீண்டும் முயற்சி செய்தால் அதை விட சிறப்பாக செய்ய முடியும். ஆனால் என்றும் முழுமை அடைய முடியாது . எப்போது முழுமை தன்மைக்காக முயற்சி செய்கிறோமோ நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. ஆனால் நேற்றை விட இன்று சிறப்பாக செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தால் நமக்கு ஊக்கம் உற்சாகம் வருகிறது. எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment