இறைவனிடம் என்ன வரம் கேட்பீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் ஐந்து வயதிலிருந்து இறைவனை பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றான் அவனது இருபதாவது வயதில் இறைவன் அவன் முன்பாக தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். உடனே அவன் எனக்கு நிறைய செல்வம், நல்ல வீடு, நல்ல கார் மற்றும் சந்தோஷம் வேண்டும் கொடுப்பீர்களா என்று கேட்டேன்.

இறைவன் கேட்டார் அவ்வளவுதானா நான் தந்தி விடட்டுமா என்று கூறினார் உடனே அவன் எனக்கு காதலிக்க ஒரு பெண்ணும் வேண்டுமென்றான். கடவுள் வரம் தந்து விட்டேன் என்று கூறிவிட்டார் அவன் இறைவனிடம் இந்த கலிகாலத்தில் அனைவரும் ஸ்ட்ரெஸ் டிப்ரஷன் என இருக்கும் போது நீங்கள் எனக்கு மட்டும் சுகமான வாழ்க்கை தந்ததற்கு நன்றி இறைவா என்று கூறினார் உடனே இறைவன் நீயே உனக்கு ஸ்டர்ஸ் டிப்ரஷன் வருவதற்கு காதலி வேண்டும் என கேட்டிருக்கிறாய் எனக்கூறி மறைந்தார்.

வாழ்க்கை என்பது சுகம் துக்கத்தின் விளையாட்டு. சுகம் மட்டுமே வாழ்க்கை என்றாலும், துக்க மட்டுமே வாழ்க்கை என்றாலும், வாழ்க்கை கசந்து விடும். சுகம் வரும்போது தலைகால் புரியாமல் நடப்பது தவறு. துக்கம் வரும்போது துவண்டு போவதும் தவறு. இதை புரிந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு