நீங்கள் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப் பாருங்கள் | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் வரக்கூடிய நாட்களை எப்படி சமாளிப்பது என்று கவலையில் இருக்கிறீர்களா? அப்போது நீங்கள் சிந்திக்க வேண்டியது இன்று வரை வாழ்க்கையில் எப்படி கடந்து வந்திருக்கிறீர்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நீங்கள் உங்கள் பள்ளியில் படிக்கும் போது உடல் சுகம் இல்லாமல் பரிட்சை எழுதி நல்ல மதிப்போடு தேர்ச்சி பெற்றிருக்கலாம்.

வேலையில் உங்களுக்கு தெரியாத ஒரு சவால் கொடுக்கப்பட்ட போது அதை கற்றுக்கொண்டு சிறப்பாக செய்து உங்கள் மேலதிகாரியிடம் பாராட்டு பெற்றிருக்கலாம்.

இது போன்று பல சவால்களை சந்தித்து தான் இன்றைய நிலையை வந்து அடைந்திருக்கிறீர்கள். அதனால் வரக்கூடிய நாட்களையும் நாம் நம்பி  எதிர்கொள்வோம்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு