பூஜ்யம் வந்த கதை உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

பல நூறு வருடங்களுக்கு முன்பாக பாரதத்தில் ஒரு சர்வே செய்தார்கள். அதாவது மனைவிக்கு பயப்படாத கணவன்மார்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என தேடினார்கள். பல குடும்பங்களில் சர்வே நடந்தது. கடைசியாக அவர்கள் கண்டுபிடித்தது ஒரு ஆண் மகனும் இல்லை என்று.

இதை எப்படி குறிப்பது என்று ஆலோசித்து இருக்கும் போது தான் அவர்கள் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தார்கள். இது தான் பூஜ்யம் வந்ததற்கான சுவாரசியமான கற்பனையான கதை.

கதை என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும் ஒரு குடும்பத்தில் மனைவிக்கு பயப்படும் கணவனோ அல்லது கணவனுக்கு பயப்படும் மனைவியோ சிறந்த குடும்பம் அல்ல.

எந்த குடும்பத்தில் கணவன் மனைவி அன்பு பாராட்டி வாழ்கிறார்களோ அது தான் சிறந்த குடும்பமாகும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு